×

மனைவியை கொன்று கணவர் தற்கொலை

திருப்பூர்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (26). இவரது மனைவி தீபா (23). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. காதலர் தினமான பிப்.14ம் தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் மனைவி தீபாவை தள்ளியதில் அவருக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றார்.

இதைப்பார்த்து அச்சமடைந்த செல்வம் அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தை நீண்ட நேரமாக வீட்டிற்கு வெளியே அழுதபடி இருந்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தனர். அப்போது, செல்வம் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீபா கீழே படுத்த நிலையிலும் இருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தீபாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

The post மனைவியை கொன்று கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Richam ,Kallakurichi district ,Diba ,Valentine's Day ,
× RELATED சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி